October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனாவால் மேலும் 48 பேர் உயிரிழப்பு; புதிய தொற்றாளர் எண்ணிக்கையில் சரிவு!

இலங்கையில் நேற்று (24) கொரோனாவால் 48 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே, 22 பெண்களும் 26 ஆண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 4 பெண்கள், 7ஆண்களும் 30 முதல் 59 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவால் நேற்று உயிரிழந்த ஏனைய 37 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

இதையடுத்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,862 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை நாட்டில் இன்று (25) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 1,941 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 248,050 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக 2,000 அதிகமான தொற்றாளர்கள் பதிவாகி வந்த நிலையில் இன்று தொற்றாளர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை விடவும் குறைவடைந்துள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான 30,568 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே இன்று (25) மேலும் 1,843 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 214,668 ஆக உயர்வடைந்துள்ளது.