
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்கப் பெற்றுள்ளது என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
துமிந்த சில்வா ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசு வேண்டுமென்றே துமிந்தவை தண்டித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குரல் பதிவுகள் மூலம் இந்த விடயம் அனைவருக்கும் வெளிச்சமாகியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலமொன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது எனவும், துமிந்தவுக்கு அநீதி இழைக்கப்பட்டது என பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டிருந்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துமிந்த சில்வா மற்றும் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமை ஆரோக்கியமான ஓர் நகர்வு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.