October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.மாவட்டத்தில் சினோபார்ம் தடுப்பூசி பெற்ற 50 ஆயிரம் பேருக்கு இரண்டாவது டோஸ் திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது

யாழ்.மாவட்டத்தில் முதல் கட்டமாக சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசி பெற்ற 50 ஆயிரம் பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கும் பணி எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பாகவுள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதானந்தன் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்துக்கு கடந்த மே மாத இறுதியில் 50 ஆயிரம் பொதுமக்களுக்கு தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவு ஊடாக சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டது.

அவ்வாறு முதல் டோஸ் கொவிட்-19 தடுப்பூசியை பெற்ற அனைவருக்கும் இரண்டாவது டோஸை வழங்கும் பணி எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என கீதானந்தன் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதற்காக சுகாதார அமைச்சினால் 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.