June 15, 2025 19:02:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் நாளாந்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை குறைந்தது!

இலங்கையில் கொரோனா தொற்றால் நேற்றைய தினத்தில் 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,814 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இன்றைய தினத்தில் 1917 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பல வாரங்களின் பின்னர் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்றைய தினத்தில் இரண்டாயிரத்தை விடவும் குறைவாக பதிவாகியுள்ளது.

இன்று பதிவான தொற்றாளர்கள் எண்ணிக்கைக்கு அமைவாக நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 248,026 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றியோரில் 212,825 பேர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.