July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மஹர, வெலிக்கடை சிறைச்சாலைகளில் கைதிகள் பலர் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!

இலங்கையின் மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் கைதிகள் பலர் தமது தண்டனையை குறைக்குமாறு வலியுறுத்தி உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹர சிறைச்சாலையில் 70 மரண தண்டனைக் கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையில் 50 கைதிகளும் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மரண தண்டனை கைதியான துமிந்த சில்வா உள்ளிட்ட கைதிகள் பலர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்தே, இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களின் போராட்டம் தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகள் மட்டத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.