June 15, 2025 15:35:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விடுதலையான அரசியல் கைதிகள் மூவர் கிளிநொச்சியில் உறவினர்களைச் சந்தித்தனர்

விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மூவர் சிறைச்சாலை அதிகாரிகளினால் கிளிநொச்சியில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இன்று சிறைச்சாலை பேருந்தில் அழைத்துவரப்பட்ட விடுதலையான மூவரும் கிளிநொச்சியில் உறவினர்களுடன் ஒன்றிணைந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நீண்ட காலம் சிறையில் இருந்த தாம் இன்றைய தினம் உறவினர்களை சந்தித்ததைப் போன்று, ஏனைய கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

தம்மை விடுவித்த ஜனாதிபதிக்கும், ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கிளிநொச்சியில் குடும்பத்துடன் இணைந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.