July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விடுதலையான தமிழ் அரசியல் கைதி ஜெயச்சந்திரனின் கோரிக்கை!

எமது விடுதலைக்காக செயற்பட்ட அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்வதாக யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து இன்று விடுதலையான சூரியகாந்தி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்றைய தினம் தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதன்படி அனூரதபுரம் சிறைச்சாலையில் இருந்து 15 பேரும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து ஒருவரும் விடுதலையாகியுள்ளனர்.

இவர்களில் 13 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுதலையான சூரியகாந்தி ஜெயச்சந்திரன், தமது விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொண்டுள்ளார்.

அத்துடன் தனது விடுதலையைப் போன்று, நீண்ட காலமாக சிறைகளில் இருக்கும் ஏனையவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.