June 15, 2025 11:41:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம் உட்பட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

Lockdown or Curfew Common Image

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருநகர் மேற்கு மற்றும் ரெக்லமேசன் மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஞ்சதொடுவாய் வடக்கு மற்றும் மஞ்சதொடுவாய் தெற்கு ஜின்னா வீதி கிராம சேவகர் பிரிவுகளும் மற்றும் மண்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாமாங்கம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குருணாகல் மாவட்டத்தின், இழுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் வில்கொட கிராமும், கனுக்கெட்டிய கிராம சேவகர் பிரிவின் கனுக்கெட்டிய கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடு முழுவதும் நேற்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.