
இலங்கையில் நேற்று (22) கொவிட் தொற்று காரணமாக 65 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே 40 ஆண்களும், 25 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,769ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இன்று (23) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2,093 பேர் இனங் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து நாட்டில் இனங் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 243,913ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,890 பேர் இன்று (23) குணமடைந்துள்ளனர்.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 30,023 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், 211,186 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.