July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

Lockdown or Curfew Common Image

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகராஜ வலவ்வ கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவின் முதலாம் மற்றும் இரண்டாம் குறுக்கு வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி பிரிவு 4, காத்தான்குடி பிரிவு 5 தெற்கு, காத்தான்குடி பிரிவு 6 மேற்கு, புதிய காத்தான்குடி பிரிவு வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கர்பலா வீதி, ஏ.எல்.எஸ். மாவத்தை, நூரானியா பொது மயான வீதி மற்றும் கடற்கரை வீதி ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதான இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.