October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனாவுக்கு பலி

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொவிட்-19 தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர் என்று யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்வடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயதுடைய பெண் ஒருவரும் 65 தொடக்கம் 85 வயதுக்குட்பட்ட ஆண்கள் மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 912 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்டத்தில் 44 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.