July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவிடமிருந்து மேலும் 2 மில்லியன் தடுப்பூசிகளை இலங்கை கொள்வனவு செய்கிறது!

ஜூலை முதல் வாரத்தில் இலங்கைக்கு மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தினால் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து இந்த தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட உள்ளன.

இதனிடையே, நாட்டில் கோவிஷீல்ட்டின் தடுப்பூசியின் 1 வது டோஸ் 925,242 பேருக்கும், 2வது டோஸ் 372,290 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சினோபார்ம் தடுப்பூசியின் 1வது டோஸ் 1443,470 பேருக்கும், 2வது டோஸ் 455,592 பேருக்கும் வழங்கப்பட்டது.

அத்தோடு ஸ்பூட்னிக் தடுப்பூசியின் 1 வது டோஸ் 113,454 பேருக்கும், 2வது டோஸ் 14,301 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கோவிட் தடுப்பூசியின் குறைந்தது ஒரு டோஸ் பெற்றுக் கொண்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,482,166 ஆக பதிவாகியுள்ளது.