July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச யோகா தினம்; யோகா அமர்வில் ஈடுபட்ட பிரதமர் மகிந்தவுக்கு இந்திய தூதரகம் பாராட்டு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா அமர்வில் கலந்துகொண்டு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் ஷிரன்தி ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இந்திய தூதரகம் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

அவர்கள் இருவரும் யோகா அமர்வில் ஈடுபடும் படமொன்றை வெளியிட்டு, இந்திய தூதரகம் டுவிட்டர் செய்தியொன்றையும் வெளியிட்டுள்ளது.

‘யோகா பயிற்சியை தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிய விதம் யோகா ஆர்வலர்களுக்கு உற்சாகமளிக்கும்’ என்று இந்திய தூதரகம் ராஜபக்‌ஷ தம்பதிகளுக்கு தெரிவித்துள்ளது.