June 14, 2025 11:59:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படாது”: அமைச்சரவை உபகுழு அறிவிப்பு!

Photo: Facebook/ Consumer Affairs Authority

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்த தீர்மானத்தை வாழ்க்கை செலவு தொடர்பிலான அமைச்சரவை உபகுழு எடுத்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர இன்று தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு லிற்றோ மற்றும் லாப் நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை முன்வைத்திருந்தது.

இந்த நிலையில் விலையை அதிகரிப்பது தொடர்பாக ஆராய அமைச்சரவை உப குழு இன்று ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.

இதன்போது எரிவாயு விலையை அதிகரிக்காது இருக்க தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.