July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் 47 பேர் கொரோனாவுக்கு மரணம்; 2,248 புதிய தொற்றாளர்கள் அடையாளம்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 47 பேர் நேற்று (19) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,581 ஆக உயர்வடைந்துள்ளது.

இதனிடையே இலங்கையில் இன்று (20) மேலும் 2,248 கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து நாட்டில் இனங் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையும் 237,661 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 33,738 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 201,389 ஆகவும் உயர்வடைந்துள்ளது.