October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சட்ட விரோதமாக கடலட்டை பிடித்த 12 மீனவர்கள் பருத்தித்துறை கடலில் கைது!

File Photo

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பில் சட்ட விரோதமான முறையில் கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் வெளிமாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அந்த மீனவர்களின் 4 படகுகளும் அவற்றின் வெளியிணைப்பு இயந்திரங்களும் மற்றும் அவர்களால் பிடிக்கப்பட்ட கலட்டைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னார் மற்றும் புத்தளம் பிரதேசங்களை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களிடம் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்றும், இதனாலேயே அவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.