July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனாவால் மேலும் 54 பேர் பலி; 2,349 புதிய தொற்றாளர்கள் அடையாளம்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 54 பேர் நேற்று (18) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,534 ஆக பதிவாகியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 30 வயதிலும் குறைந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவருமாக இருவர் அடங்குவதாகவும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 4 பெண்களும் 5 ஆண்களும் அடங்குவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, 60 வயதுக்கு மேற்பட்ட 18 பெண்களும் 25 ஆண்களும் உயிரிழந்தவர்களிடையே அடங்குவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கையில் இன்று (19) மேலும் 2,349 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து நாட்டில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையும் 235,413 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 33,540 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 199,393 ஆகவும் உயர்வடைந்துள்ளது.