July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு; மாட்டு வண்டியில் பயணித்த நால்வர் கைது!

இலங்கையில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாதைகளை ஏந்தியபடி மாட்டு வண்டியில் பயணித்த நால்வரை காலி பொலிஸார் இன்று (19) கைது செய்துள்ளனர்.

இவர்கள் காலி பாலத்திற்கு அருகிருந்து காலி நகருக்கு இவ்வாறு மாட்டு வண்டியில் பயணித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடையே ஐக்கிய  மக்கள் சக்தியின் ஆர்வலர்  கனிஷ்கா என்பவரும் அடங்குகின்றார்.

 

குறித்த சம்வம் தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பயணக் கட்டுப்பாடுகளை மீறியமைக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நான்கு பேரில் காலி மாவட்ட பிரதேச சபையின் முன்னாள் தலைவரின் மகனும் அடங்குவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணையை காலி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.