May 25, 2025 18:27:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டக்களப்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்மநாபா நினைவு நிகழ்வு

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வு மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.

கொரோனா நிலைமைகளை கருத்திற் கொண்டு, சுகாதார விதிமுறைகளுக்கமைய குறிப்பிட்ட சிலரின் பங்களிப்புடன் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாண சபை முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மண்முனை மேற்கு பிரதேச சபை உப தவிசாளர் பொன்னம்பலம் செல்லத்துரை  மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது பத்மநாபாவின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

1990.06.19 ஆம் திகதியன்று இந்தியாவின் சென்னையில் ஈழமக்கள் புரட்சிகர விடுலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா உட்பட 13 தோழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அன்றைய தினத்தை தியாகிகள் தினமாக  பிரகடனப்படுத்தி 1981 ஆம் ஆண்டு தொடக்கம் மரணித்த அனைவரையும் நினைவு கூர்ந்து இந் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.