June 14, 2025 20:27:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின் உயர்த்தி உடைந்து விழுந்ததில் இருவர் பலி:

கண்டி, லெவல்ல பகுதியில் தற்காலிக மின் உயர்த்தி உடைந்து விழுந்ததில் இருவரும் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (16) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

மின் உயர்த்தியில் குறிப்பிட்ட அளவை விட, அதிகமான கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்றதாலேயே, தற்காலிக மின் உயர்த்தி மூன்றாவது மாடியில் இருந்து அறுந்து விழுந்துள்ளது.

ஒருவர் சம்பவ இடத்திலும் காயமடைந்தவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்துள்ளார்.

சுமார் 55 மற்றும் 57 வயதுடைய இருவமே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.