May 31, 2025 6:02:41

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஐயாயிரம் ரூபா நிவாரணம் கிடைக்குமா?”: வட்டவளையில் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா மாவட்டத்தின் வட்டவளை கரோலினா தோட்டத்தில் உள்ள மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கொழும்பு போன்ற வெளியிடங்களுக்கு சென்று தொழில் செய்ய முடியாத நிலையில், தாம் வாழ்வாரத்தை இழந்து நிர்கதியாகியுள்ளதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணம் கூட இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் தமது பிள்ளைகள் உள்ளிட்டோர் ஒருவேளை உணவுக்காக கஸ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதுவரை தோட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட தமது தோட்ட பகுதிக்கு வந்து தம்மை விசாரிக்கவில்லை என்றும் ஆர்ப்பாட்டகாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனால் கோரிக்கைகளுக்கு மலையக அரசியல் தலைமைகள் உடனடி தீர்வை வழங்க வேண்டும் எனவும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.