
கைத்தொழில் அமைச்சின் புதிய செயலாளராக ஜெனரல் (ஓய்வு நிலை) தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கைத்தொழில் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய அனூஷ பெல்பிட்ட தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அனுமதி கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதனடிப்படையில் அவருடைய இடத்துக்கு இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராக கடமையாற்றிய ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான ஜெனரல் தயா ரத்நாயக்க இலங்கை இராணுவத்தின் 20ஆவது தளபதியாக பதவி வகித்தவராவார்.
இதேவேளை, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பதவிக்கு அத்துறையில் தேர்ச்சி பெற்ற நிஹால் கெப்பெட்டி பொல நியமிக்கப்பட்டுள்ளார்.