July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சிறுவர்களைத் தாக்கும் புழு நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை!

இலங்கையில் பூனை மற்றும் நாய்கள் மூலம் சிறுவர்களுக்கு டோக்ஸோகாரியாசிஸ் (toxocariasis) எனப்படும் புழு நோய் தொற்றுவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகளுடன் சிறுவர்கள் வீட்டில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.

மேலும்,பெரும்பாலும் பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் போன்ற சிறிய விலங்குகளின் உடலில் இந்த புழு உருவாகின்றது.

அத்தோடு, இந்த விலங்குகளுடன் தொடர்பை பேணும் சிறுவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் தோலில் புழுக்கள் ஏற்படும் என கூறப்படுகின்றது.

இதன் பின்னர் அந்தப் புழுக்கள் குழந்தைகளின் கண்கள், மூளை மற்றும் நுரையீரலுக்குள் நுழைந்து கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று கூறியுள்ளார்.

அத்துடன், கடந்த சில நாட்களாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, இதுபோன்ற வீட்டு விலங்குகளுக்கு மருந்துகளை கொடுப்பதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் மேலும் கூறினார்.