![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/9ddd84ad-9b4f-481f-b8f9-83bf29ff8492.jpg?fit=1024%2C683&ssl=1)
File Photo
90 ஆயிரம் ரூபா பெறுமதியான 30 டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகளை திருடியமை தொடர்பில் ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி நேற்று (16) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
அதனடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தில் கடமையாற்றும் சிற்றூழியர் ஒருவர் மற்றும் வாகன சாரதி ஒருவர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி, சினோபார்ம் தடுப்பூசிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் காலி குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.