June 18, 2025 23:09:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொருத்தமற்ற நேரத்தில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது; கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

பொருத்தமற்ற நேரத்தில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று மற்றும் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து போன்ற நிலைமைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் நாட்டில் எரிபொருளுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளமை ஏற்புடையதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை உயர்வின் விளைவாக பொதுமக்கள் இப்போது மேலும் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

மீன்பிடிப்பதற்கு எரிபொருளை நம்பியுள்ள மீனவர்கள், பயணத் தடை மற்றும் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.எனவே எரிபொருள் விலை உயர்வால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.