![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/11/covid.jpg?fit=512%2C275&ssl=1)
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 59 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 28 பெண்களும் 31 ஆண்களும் அடங்குகின்றனர்.
இதற்கமைய, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,374 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 2,436 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானது.
இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையும் 230,692 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 34,232 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,667 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 194,145 ஆக அதிகரித்துள்ளது.