July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வாருங்கள்; மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு!

இலங்கையில் மீன்பிடி சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வருமாறு கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் குழு, இன்று (16) கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை அவரது இல்லத்தில் இன்று சந்தித்த கவிந்த ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

அத்தோடு, எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து, எரிபொருள் விலை உயர்வு மற்றும் தற்போதைய கொரோனா நிலைமை ஆகிய நெருக்கடிகளினால் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறும்படியும் எம்.பி.க்கள் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த கோரிக்கைக்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் தமது நிலைப்பாடு குறித்து ஆண்டகை அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.