October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலின் இலங்கை முகவர் கைதாகி, பிணையில் விடுதலை

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலின் இலங்கை முகவர், எக்ஸ்- பிரஸ் பீடர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அர்ஜூன ஹெட்டியாரச்சி கைதாகி, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கப்பலின் இலங்கை முகவர் அர்ஜூன ஹெட்டியாரச்சி இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கப்பல் அனர்த்தம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான போதே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கப்பலின் இலங்கை முகவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், நீதிமன்றம் அர்ஜூன ஹெட்டியாரச்சியை பிணையில் விடுதலை செய்துள்ளது.

ஒரு இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதி இரு சரீரப் பிணைகளின் அடிப்படையில் கப்பலின் உள்நாட்டு முகவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.