June 14, 2025 19:43:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நெல் களஞ்சியசாலையில் இருந்த இயந்திரத்தை திருடிய குற்றச்சாட்டில் மக்கள் பிரதிநிதிகள் இருவர் கைது!

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான கொழும்பு மீதொட்டுமுல்ல பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் இருந்த இயந்திரத்தை திருடிய குற்றச்சாட்டில் கொலன்னாவை நகர சபையின் உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இயந்திரத்தை திருடிய சந்தேக நபர்கள், அதனை நபரொருவருக்கு விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் 50 மற்றும் 52 வயதுடைய இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இருவரும் இன்றைய தினம் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை அந்த இயந்திரத்தை கொள்வனவு செய்த நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.