July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 55 பேர் மரணம்!

File Photo

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 55 பேர் நேற்றைய தினத்தில் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 33 ஆண்களும், 22 பெண்களும் உள்ளடங்குவதாகவும், இவர்களில் 11 பேர் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதுடன், 44 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,315 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்றைய தினத்தில் 2275 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 228,197 ஆக உயர்வடைந்துள்ளதாக கொவிட் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் தொற்றில் இருந்து இதுவரையில் 192,478 பேர் பூரண குணமடைந்துள்ளதாகவும் கொவிட் தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.