July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அசாத் சாலி தொடர்பான விசாரணைகள் முடிவடைந்ததாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

அசாத் சாலி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகளின் போதே, சட்டமா அதிபர் திணைக்களம் இவ்வாறு அறிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய ஊடக மாநாடு தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அசாத் சாலி, மார்ச் மாதம் 16 ஆம் திகதி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை உரிமை மீறலாகும் எனத் தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவை விசாரணை செய்யும் நீதியரசர் குழாத்தில் இருந்து நீதியரசர் ஜனாக் டி சில்வா விலகிக்கொண்டதைத் தொடர்ந்து, மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அசாத் சாலி மீதான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.