![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/06/ja-nure-6.jpg?fit=800%2C450&ssl=1)
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடின் அடுத்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொவிட் சிகிச்சை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தாதிமார் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை வழங்குமாறு வலியுறுத்தி கடந்த மாத இறுதியில் இலங்கை முழுவதும் அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதிமார்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
எனினும் தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், பொது வசதிகளில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், தாதியர்கள் சேவைக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட இடைக்கால கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் எச்.எம்.எஸ்.பி மெதிவத்த தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உடனடியாக தலையீடு செய்து தமது கோரிக்கைளை நிறைவேற்றாவிடில் அடுத்த வாரம் நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று மெதிவத்த கூறியுள்ளார்.