July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 62 மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 62 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பதிவாகியுள்ள மரணங்களின் எண்ணிக்கை 2073 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த 62 மரணங்களில் 7 மரணங்கள் மே மாதம் 8 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையும் ஏனையவை ஜூன் 1 முதல் 10 வரையிலும் பதிவானவையாகும்.

குறித்த காலப்பகுதியில் 35 ஆண்களும் 27 பெண்களும் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று கொரோனா தொற்றுடன் தொடர்புடைய மரணங்கள் பதிவாகவில்லை என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.