July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றாளர்களால் நிரம்பி வழியும் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை!

கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை கொரோனா நோயாளர்களால் நிரம்பியுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வரும் நிலையில், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் 160 கொரோனா தொற்றாளர்கள் தற்சமயம் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஐ.டி.எச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 8 பேர் தற்சமயம் சிகிச்சை பெற்று வருவதனால் அந்தப் பிரிவிலுள்ள அனைத்து நோயாளர் கட்டில்களும் பூரணமாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்படுகின்ற நோயாளர்களுக்கு கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையே சிகிச்சையளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும், தற்போதைய நிலைமையை முடிந்தளவு முகாமைத்துவம் செய்துகொண்டு மருத்துவமனையில் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.

அதேபோல, மருத்துவமனையில் உள்ள ஒக்ஸிஜன் தட்டுப்பாட்டுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.