October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின்போது இடையூறு விளைவித்த மொறட்டுவை நகரசபை மேயருக்கு பிணை!

மொறட்டுவை நகரசபை மேயர் சமன்லால் பெர்னாண்டோ பிணையில் செல்வதற்கு மொறட்டுவை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த மாதம 27 ஆம் திகதி மொரட்டுமுல்ல பகுதியில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின்போது வைத்திய அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இவர் கல்கிஸ்ஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று (11) அவர் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணை வழங்கப்பட்டது.