
கொழும்புத் துறைமுகத்தை அண்மித்த கடல் பகுதியில் ‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பலில் ஏற்பட்ட தீயால் பாதிக்கப்பட்ட கரையோர மக்களுக்கு உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது.
இதன் ஆரம்பகட்டமாக ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த கப்பலை அண்மித்த கடல் பிரதேசங்களில் பிளாஸ்டிக் மற்றும் இரசாயனக் கழிவுகள் கலந்துள்ளன. இதன் காரணமாக மீனவக் குடும்பங்கள் பல வாழ்வாதாரம் இழந்துள்ளன.
இந்த குடும்பங்களுக்கு உடனடி உதவிகளை சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கப்பல் தீயினால் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் தாக்கங்களை தணிப்பதற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் தூதரகம் கூறியுள்ளது.