
இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 101 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட அதிகூடிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கையாக இது அமைந்துள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2011 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை கடந்த 10 நாட்களில் 527 மரணங்கள் பதவிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.