July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சஹ்ரானுக்கு தங்குமிடம் வழங்கி உதவிய குற்றச்சாட்டில் இருவர் கைது!

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹசீமுக்கும் அவருடைய குழுவினருக்கும் தங்குமிட வசதிகளை வழங்கி, அவர்களை பாதுகாத்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மற்றும் கஹட்டகஸ்திகிலிய ஆகிய பிரதேசங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சஹ்ரானுக்கும் அவரின் குழுவை சேர்ந்த 5 பேருக்கும் தங்குமிட வசதிகளை வழங்கி அவர்கள் மறைந்திருப்பதற்கு, சந்தேக நபர்கள் உதவியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்களில் ஒருவர் முகரியாவ பகுதியில் உப தபால் அதிகாரியாக பணியாற்றும் 47 வயதுடைய நபர் எனவும், மற்றையவர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 35 வயது நபர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.