July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு தன்னார்வ படையணி ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தன்னார்வ படையணி ஒன்றை ஸ்தாபிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போதைய கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் நேரடியாக ஈடுபடாத சுகாதார ஊழியர்களை குறித்த பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தும் நோக்கத்துடன் தன்னார்வ படையணி ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து இதற்காக பதிவு செய்து கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக பங்களிப்பு செய்வதற்கு ஏராளமான மக்கள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.