February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க வெள்ளை மாளிகையில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு முக்கிய பதவி

அமெரிக்க வெள்ளை மாளிகையின் கூட்டுறவு தொடர்பான ஜனாதிபதி ஆணையத்திற்கு இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கலாநிதி ஜோர்ஜ் ஈ. கேப்ரியல் நியமிக்கப் பட்டுள்ளார்.

ஜனாதிபதி ஜோ பைடனால் இவர் அந்த ஆணையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கலாநிதி கேப்ரியல் அமெரிக்காவில் குடியேறுவதற்கு முன்னர் இலங்கையின் களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர் என்று அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளை மாளிகை கூட்டுறவு தொடர்பான ஜனாதிபதி ஆணையத்திற்கு ஜனாதிபதி ஜோ பைடனால் 22 பேர் கொண்ட உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.