வவுனியா சாந்தசோலைப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாந்தசோலைப் பகுதியில் நேற்று மாலை, முறையாக முகக் கவசம் அணியாது சென்ற இளைஞன் ஒருவனை முறையாக அதனை அணியுமாறு எச்சரித்த போது அந்த இளைஞன் பொதுச் சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான சுகாதார பரிசோதகர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்வதற்காக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.