July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணக் கட்டுப்பாட்டை கடுமையாக அமுல்படுத்துமாறு விசேட மருத்துவ நிபுணர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையில் அமுலில் பயணக் கட்டுப்பாட்டை கடுமையாக அமுல்படுத்துமாறு விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், மருத்துவமனைகளால் ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்படலாம் என்றும் குறித்த சங்கம் எச்சரித்துள்ளது.

“கொரோனா வைரஸ் பரவல் 12 வீதத்தால் அதிகரித்துள்ளது. கொரோனா மரணங்கள் 28 வீதத்தால் உயர்வடைந்துள்ளது.

இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போது அமுலில் பயணக் கட்டுப்பாட்டை மேலும் கடுமையாக நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்”

என்று விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் தட்டுப்பாடு இன்றி தடுப்பூசிகளை விநியோகிக்கத் தேவையான வேலைத் திட்டங்களின் தேவையையும் ஜனாதிபதிக்கான கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.