![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/11/ranil-1-e1618463943769.jpg?fit=498%2C297&ssl=1)
ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் ஜனாதிபதியாகவும் முடியும் என்று அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இணையவழியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் 40 ஆசனங்களை வைத்துக்கொண்டு பிரதமரான ரணில் விக்ரமசிங்க, அரசியல் விஞ்ஞானத்துக்கு ஏற்ப ஒரு ஆசனத்தால் பிரதமராகி, பின்னர் ஜனாதிபதியாகவும் முடியும் என்று வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு புதிய அரசியல் பயணமொன்றை ஆரம்பிப்பதற்காகவே ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றம் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.