July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மிருசுவில் ஆலடிப் பிள்ளையார் கோயில் இனந்தெரியாதோரால் இடிக்கப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் வீதியோரத்தில் இருந்த ஆலடிப் பிள்ளையார் கோயில் இனந்தெரியாதோரால் இடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏ-9 வீதியில் கொடிகாமத்துக்கும் மிருசுவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறிய அளவில் குறித்த பிள்ளையார் கோயில் காணப்பட்டது.

இந்நிலையில் இன்று காலையில் அவதானித்தபொது ஆலயம் இடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.