October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மிளகுத் தோட்டத்திற்குள் நுழைந்த இளைஞன் துப்பாக்கிச் சூட்டில் பலி: இரத்தோட்டையில் சம்பவம்!

File Photo

மாத்தளை, இரத்தோட்டை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 29 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சட்ட விரோதமான முறையில் வேறு ஒருவரின் மிளகுத் தோட்டத்திற்குள் நுழைந்த போது, தோட்டத்தின் உரிமையாளரினால் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் துப்பாக்கியுடன் இரத்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தோட்டத்திற்குள் காட்டுப் பன்றி புகுந்துள்ளதாக நினைத்தே தான் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக அந்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.