July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சியில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் நடமாடும் பிரிவு களத்தில்

கிளிநொச்சி மாவட்டத்தில் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருந்தும் படிப்படியாக மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் நடமாடும் பிரிவு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

நேற்று (7) முதல் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், குறித்த மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிசாரும் படையினரும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் நடமாடும் பொலிஸ் பிரிவு திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருவதுடன், அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து பொருத்தமற்ற காரணங்களுடன் நடமாடும் மக்களை எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

அதேவேளை, ஏ-9 வீதியுடன் இணையும் அனைத்து இணைப்பு வீதிகளிலும் படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இரணைமடு சந்தி, டிப்போ சந்தி மற்றும் கரடிபோக்கு சந்தி, பரந்தன் உள்ளிட்ட பகுதிகளில் வீதி தடைகள் அமைக்கப்பட்டு மக்களின் தேவையற்ற நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு வருவதுடன், சோதனைகளும் இடம்பெற்ற வருகின்றன.