October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வந்துள்ள பிரான்ஸின் கப்பல் பணிக் குழுவினர் பயண பாதுகாப்பு கவச முறையில் சுற்றுலா!

இலங்கைக்கு பயண பாதுகாப்பு கவச முறையில் வந்துள்ள பிரான்ஸின் கப்பல் பணிக் குழுவினர் இன்று முதல் சுற்றுலா பயணத்தை ஆரம்பிப்பதாக சுற்றுலாத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸின் 750 பணிக் குழுவினரை உள்ளடக்கிய இரண்டு கப்பல்கள் பயண பாதுகாப்பு கவச முறையில் இலங்கைக்கு வந்துள்ளன.

குறித்த பணிக் குழுவினர் இன்று முதல் இலங்கையில் சுற்றுலா பயணங்களை ஆரம்பித்துள்ளனர்.

90 சுற்றுலா பயணிகளை உள்ளடக்கிய குழுவொன்று யால தேசிய சரணாலயத்திலும், 156 சுற்றுலா பயணிகள் கொண்ட குழுவொன்று உடவலவ சரணாலயத்திலும் சுற்றுலா நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன.

நாளை மேலும் 90 பயணிகள் உடவலவ சரணாலயத்திலும் 80 பயணிகள் மின்னேரிய தேசிய சரணாலயத்திலும் சுற்றுலா நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

பிரான்ஸின் 750 பயணிகளைக் கொண்ட பணிக் குழுவினர் இம்மாதம் 11 ஆம் திகதி வரை இலங்கையில் சுற்றுலா நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.