October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் ஊடகவியலாளர் சமுதித்த பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு!

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரம, பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்கிரமரட்ணவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரம, தனக்கு விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் குறித்து விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பயணக் கட்டுப்பாட்டுக்கு மத்தியில் கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தவர்கள் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கேள்விகளை எழுப்பியிருந்த நிலையிலேயே தனக்கு இவ்வாறான உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு இனந்தெரியாத நபர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன எனவும், தனது கேள்விகளால் சிலர் தனிப்பட்ட ரீதியிலும் அரசியல்ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆனால் ஊடகவியலாளர் என்ற ரீதியில் தான் தனது கடமையையே செய்தேன் என்றும் சமுதித்த அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.