![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/06/fish-new.jpg?fit=401%2C226&ssl=1)
கடல் மீன்களை உட்கொள்வதில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று தேசிய நீரியல் வள ஆய்வு நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளதாக மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக கடல்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான ‘எக்ஸ்-பிரஸ்பேர்ல்’ கப்பலில் இருந்து வெளியான இரசாயனம் மற்றும் பிற பொருட்கள் கடலில் கலந்துள்ளது.
இதனால் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் உண்பதற்கு உகந்ததல்ல என பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ள தேசிய நீரியல் வள ஆய்வு நிறுவனத்தின் ஆரம்ப அறிக்கைகளின்படி, கடல் மீன்களை உண்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.