July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம்- கண்டி பிரதான வீதியில் சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை விற்பனைக்கு எடுத்துச்சென்ற  நபரொருவரை யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நாடு பூராகவும் பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், யாழ்ப்பாணம் -கண்டி பிரதான வீதியில் அரியாலை மாம்பழம் சந்திக்கு அண்மையில் முச்சக்கர வண்டியொன்றில் மதுபானத்தை விற்பனைக்காக எடுத்துச் சென்றவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குற்ற விசாரணைப் பிரிவு சப் இன்ஸ் பெக்டர் ரி.மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவின் கண்காணிப்பில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 300 பியர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு உபயோகிக்கப்பட்ட முச்சக்கர வண்டியையும்  மீட்டனர்.

கைது செய்யப்பட்டவர் விசாரணையின் பின் சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.